Tuesday, December 2, 2025

மணல் கடத்தலுக்கு துணை போகிறதா அதிரை காவல்துறை ?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதையும், அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை என்பதையும் கண்டித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டுருந்தோம்.

மேலும் அவ்வாறு திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள், ஈசிஆர் சாலையில் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தோம். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி ஈசிஆர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் நேற்று இரவு மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 5 லாரிகளை அதிரை காவல்துறையினர் பிடித்து பறிமுதல் செய்ததாகவும், பின்னர் அதிரை காவல் நிலையத்திற்கு 4,5 கார்களில் கறைவேட்டிக்காரர்கள் படையெடுத்து சென்றதாகவும், அங்கு அவர்கள் சுமார் அரைமணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறியதும், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் உடனடியாக விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் ஒரு சட்டம், சாமானியன் தவறு செய்தால் ஒரு சட்டமா என குமுறுகின்றனர் அதிரைவாசிகள்.

அதிரை காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை மணல் கடத்தும் மாஃபியாக்களுக்கு அதிரை காவல்துறை உடந்தையாக இருக்கிறதா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்புகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img