Friday, April 19, 2024

220 வாக்காளர் அட்டைகள் தி.மு.க.,வினரிடம் பறிமுதல்!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை, ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில்,ஆலந்துார் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி, பாலசுப்பிரமணியம் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, வாகனசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தி.மு.க., கொடியுடன் வேகமாக வந்த காரை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கட்டு கட்டாக, தென்சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின், வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரித்தபோது, காரில் வந்தவர்கள், முன்னுக்கு பின்முரணாக பதிலளித்தனர்.இது குறித்து,பறக்கும் படையினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட, 220 வாக்காளர் அடையாள அட்டைகள், காரில் அவற்றை கொண்டு வந்த உள்ளகரம், 168வது வார்டு, தி.மு.க., வட்ட செயலர், திவாகர், 37,மற்றும் ஆறு தி.மு.க., பிரமுகர்கள், ஆதம்பாக்கம்காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டனர்.அவர்கள் மீது, வாக்காளர்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டமூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, ஏழு பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...