Friday, April 19, 2024

ரூ.1.76 லட்சம் கோடி சொத்தா அதிர்ச்சியை ஏற்படுத்திய வேட்பாளர்!!

Share post:

Date:

- Advertisement -

பெரம்பூர் சட்டசபை தொகுதியில், ‘ஜெபமணி ஜனதா கட்சி’ சார்பில் போட்டியிடும், மோகன்ராஜ், 76, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவர், தன் வேட்பு மனுவில், தன்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் உள்ளது; உலக வங்கியில், நான்கு லட்சம் கோடி ரூபாய், கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டு, அவருக்கு, ‘மிளகாய்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மோகன்ராஜ் கூறியதாவது:’2ஜி’ ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததை குறிப்பிடும் வகையில், என்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளேன். தமிழகத்தின் கடன், நான்கு லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதை என் கடனாக ஏற்று, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.ஏற்கனவே, 2009 லோக்சபா தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டபோதும், 2016 சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட போதும், இதே போன்ற விபரங்களை தெரிவித்திருந்தேன். வேட்பு மனுவில், தவறான தகவல் குறிப்பிட்டது குறித்து, யாரும் எதுவும் கேட்டதில்லை. நீதிமன்றத்தில், கலெக்டர் பொய் கூறுகிறார். இது தொடர்பாக போட்ட வழக்கையே, நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...