Friday, March 29, 2024

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?

Share post:

Date:

- Advertisement -
மதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறைக்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி ஒருவர் நுழைந்ததாக கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் கடந்த 18 ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சித்திரை திருவிழாவைமுன்னிட்டு இரவு 8 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மே மாதம் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஓட்டு பதிவான மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணப்படும் பகுதியான அரசு மருத்துவக்கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பை மீறி பெண் அதிகாரி ஒருவர் அனுமதியின்றி நுழைந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அறைக்குள் இருந்ததாகவும் முக்கிய ஆவணங்களை சிலவற்றை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த பல்வேறு கட்சியினர் அரசு மருத்துவக்கல்லூரி முன்னர் கூடினர்.போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறையின் சிசிடிவி காட்சிகளை அரசியல் கட்சியனருக்கு காண்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனகோரிக்கை விடுத்து மா.கம்யூ., அமமுக கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...