அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 06/04/2019 அன்று அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் (21/04/2019) அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் KARAI UNITED மற்றும் CHIDAMBARAM அணியினர் மோதினர். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த CHIDAMBARAM அணியினர் 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்தனர். பின்னர் 142 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KARAI UNITED அணி, 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் CHIDAMBARAM அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்களும், AFCC அணியின் தலைவர்கள் அனஸ் அவர்களும், ஷேக் தம்பி அவர்களும் கலந்துக்கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.