Home » நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மசூதியில் சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்த முஸ்லிம்கள் !!

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மசூதியில் சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்த முஸ்லிம்கள் !!

0 comment

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மாட் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. பொதுவாக மாணவர்கள் தூரத்து இடத்தில் இருந்து வந்து தேர்வு எழுதுவர். அவர்களுடன் வரும் பெற்றோர்கள், வெட்ட வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பெற்றோர்களின் நலன் கருதி, அவர்கள் ஓய்வெடுப்பதற்காக மசூதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீமூலநகரத்தில் உள்ள மசூதியில் தான் பெற்றோர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. இது பெற்றோர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருந்தது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter