தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுதும் அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். கம்மல், ஹேர் க்ளிப், மூக்குத்தி, ஹை ஹீல்ஸ் காலணிகள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கடும் கட்டுப்பாட்டுகளுடன் அனுமதிக்கப்பட்டதால் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவனின் சட்டையை வெட்டிய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர் ஒருவரின் பேண்டின் மெட்டல் ஷிப் அகற்றப்பட்டது சோதனையின் உச்சக்கட்டம் என்று பெற்றோர்கள் புலம்பினர்.
தேர்வு எழுத வந்த மாணவர்களைச் சோதனை என்ற பெயரில் அலங்கோலப்படுத்தி அனுமதிப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.