Thursday, March 28, 2024

7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரைக்கு வந்த பயணிகள் ரயில்-பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

அதன்படி பயணிகள் ரயிலானது, இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டது. வழியில் மாங்குடி, மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக அதிராம்பட்டினத்திற்கு பகல் 12.07 மணியளவில் வந்தது.

அதிரைக்கு வந்த பயணிகள் ரயிலை, ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிரைவாசிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதற்காக பெரியவர்கள் முதல் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் அதிரை ரயில் நிலையத்தில் திரண்டிருந்தனர். இந்த ரயிலானது பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக பிற்பகல் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடையும்.

மேலும் இன்று தொடங்கப்பட்ட பயணிகள் ரயில் சேவையில், நாகை  நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட்  உறுப்பினர் எம். செல்வராசு திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை வரை ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...