Home » மிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி!!

மிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி!!

by admin
0 comment

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 18 வது நாளான இன்று முதல் போட்டியில் அதிரை SSMG – Udhayam FC புதுக்கோட்டை அணிகள் மோதின.

அடுத்த சுற்று செல்வதற்கு இரு அணிகளும் கடுமையாய் உழைத்தாலும் அதிரை SSMG அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கௌதியா 7’s நாகூர் – Blues வேலங்குடி அணிகள் களம் கண்டன.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் முதல் கோலை தங்கள் வசமாக்க வரிந்து கட்டிக் கொண்டு விளையாடினர்.

இருப்பினும் தனது அருமையான ஆட்டத் திறனால் நாகூர் அணி எதிரணியின் யுக்திகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இறுதியாக 1 – 1 என்கிற கோல் கணக்கில் சம நிலையில் ஆட்டம் முடிவுற்றதால் ‘டை – பிரேக்கர்‘ முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் நாகூர் அணி 7 – 6 என்கிற கோல் கணக்கில் வேலங்குடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு காலிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

நாளைய தினம் கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter