Thursday, April 18, 2024

மிரட்டிய நாகூர் : வெளியேறிய வேலங்குடி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 18 வது நாளான இன்று முதல் போட்டியில் அதிரை SSMG – Udhayam FC புதுக்கோட்டை அணிகள் மோதின.

அடுத்த சுற்று செல்வதற்கு இரு அணிகளும் கடுமையாய் உழைத்தாலும் அதிரை SSMG அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கௌதியா 7’s நாகூர் – Blues வேலங்குடி அணிகள் களம் கண்டன.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் முதல் கோலை தங்கள் வசமாக்க வரிந்து கட்டிக் கொண்டு விளையாடினர்.

இருப்பினும் தனது அருமையான ஆட்டத் திறனால் நாகூர் அணி எதிரணியின் யுக்திகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இறுதியாக 1 – 1 என்கிற கோல் கணக்கில் சம நிலையில் ஆட்டம் முடிவுற்றதால் ‘டை – பிரேக்கர்‘ முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் நாகூர் அணி 7 – 6 என்கிற கோல் கணக்கில் வேலங்குடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு காலிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

நாளைய தினம் கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...