அமமுக பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி. தினகரன், அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி துணைப்பொதுச்செயலாளராக பாப்பிரெட்டிப்பட்டி பி.பழனியப்பன், தஞ்சை எம்.ரெங்கசாமி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும், பொருளாளராக வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் கொரடா ஆர்.மனோகரன், கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலிலும் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் அமமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்தார் டிடிவி தினகரன்.