அதிராம்பட்டினத்தின் ஷம்சுல் இஸ்லாம் சங்க மிகப்பெரிய முஹல்லாவை கொண்டதாகும்.
இந்த் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், ஏழை எளிய மக்களை கண்டறிந்து உதவிகள் பல
செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அளித்த நேர்காணலில் முஹல்லாவிற்கு உட்பட்ட அனைத்து பள்ளிவாசலிலும் சங்கத்தின் சார்பில் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட உள்ளது என்றும், உளு செய்யும் நீர் விரயமாவதை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இது வழிவகை செய்யும்படி இத்திட்டம் செயல்பட உள்ளதாக அவர் கூறினார்.
முதற்கட்டமாக ஏஜெ ஜும்மா பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் படிப்படியாக முஹல்லாவை சேர்ந்த பள்ளிகளுக்கும், பொருளாதார நிலைமைக்கேற்ப ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.