Home » கொட்டும் மழையில் சிறப்பாக நடைபெற்ற அதிரை WFC கால்பந்து தொடர் போட்டி !

கொட்டும் மழையில் சிறப்பாக நடைபெற்ற அதிரை WFC கால்பந்து தொடர் போட்டி !

0 comment

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் MGR 7s பாண்டிச்சேரி அணியினரும் நேதாஜி FC தஞ்சாவூர் அணியினரும் மோதினர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் தஞ்சாவூர் அணி 1 கோல் அடித்து முன்னிலையில் ஆடியது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியில் பாண்டிச்சேரி அணி 1 கோல் அடிக்க, ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் MGR 7s பாண்டிச்சேரி அணி 4-2 என்ற கோல் கணக்கில் நேதாஜி FC தஞ்சாவூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(20/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

Coaching Centre காரைக்கால் vs கலைவாணர் 7s கண்டனூர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter