Home » மல்லிப்பட்டிணத்தில் குடிநீருடன் சாக்கடை கலந்த நீர் வினியோகம்..!

மல்லிப்பட்டிணத்தில் குடிநீருடன் சாக்கடை கலந்த நீர் வினியோகம்..!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மருதுபாண்டி நகரில் சாக்கடையுடன் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மருதுபாண்டி நகரில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு குடிநீருக்காக வினியோகிக்கப்படும் நீரில் சாக்கடையுடன் கலந்த நீர் வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாகவே எங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது. வழங்கப்படுகிற தண்ணீரில் சாக்கடை கலந்து வருவதால் குடிப்பதற்கு தண்ணீர் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. ஊராட்சியின் பல பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

புகைப்படம்:- நன்றி மல்லி நியூஸ்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter