Wednesday, April 24, 2024

காஷ்மீருக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்க கூடாது – தமுமுக ஹைதர் அலி!!

Share post:

Date:

- Advertisement -

 

திருச்சி: காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்….

திருச்சி மாவட்டம் தில்லைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில ஊடகப்பிரிவு மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது… இதில் மாநிலச் செயலாளர் முகமது ரபிக், மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி, மாநில துணைத் தலைவர் கோவைசெய்யது, துணை பொதுச் செயலாளர் உஸ்மான்கான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வாஹித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹைதர் அலி,இந்தியா தற்போது கருப்பு தேசமாக மாறி வருவதாகவும், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத் தக்கது என்றும் கூறினார். மத்திய அரசின் ஜிஎஸ்டியால் பல நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளதாக கூறிய அவர், பார்லே ஜி பிஸ்கெட் நிறுவனம் வர்த்தகம் பாதிப்பு இருப்பதாக கூறி 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்…

இவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே காஷ்மீர் பிரிப்பு, என்ஐஏ சட்டம், முத்தலாக் போன்றவற்றை நிறைவேற்றுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் ராகுல் காந்தியை காஷ்மீருக்குள் அனுமதிக்க அம்மாநில நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருவது கண்டனத்திற்குறிது என்றும் ராகுல் காந்திக்கு காஷ்மீர் மாநிலம் செல்ல முழு உரிமை உள்ளது, எனவே அவர் செல்வதை தடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...