Friday, March 29, 2024

அதிரையில் 2 உயிர்களை பலி வாங்கிய டெங்கு ! நாம் விழித்துக்கொள்ள தவறிவிட்டோம் !!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக  பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அதிரையில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகளும் இல்லை. அதிரையில் நிலவும் மிக மோசமான சுகாதார சீர்கேட்டினாலும் அதை கண்டுகொள்ளாத பேரூராட்சியினாலும் நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு மட்டுமின்றி மலேரியா , டைஃபாய்டு முதலான நோய்களும் பரவி வருகின்றன.

 

பொதுமக்களும் தங்கள் மனம்போன போக்கில் குப்பைகளை கொட்டுவதும் அதிரையில் நிலவும் சுகாதார சீர்கேட்டிற்கு காரணம். பொதுமக்கள் பேரூராட்சியை மட்டும் குறை கூறாமல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.  இனியும் தாமதிக்காமல் அதிரையில் பரவும் டெங்குவை ஒழிக்க பேரூராட்சி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...