Friday, March 29, 2024

என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்… காஷ்மீர் வழக்கில் மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சாட்டையடி !

Share post:

Date:

- Advertisement -

ஜம்மு காஷ்மீரில் இப்போதும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது.

அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் அதிக கவனம் பெற்றது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நிலவுவது ஏன் ? ஒருவரை மற்றொருவர் சந்திப்பதில் என்ன தவறு. காஷ்மீர் மக்களுடன் இந்தியாவின் பிற பகுதி மக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

காஷ்மீரில் ஏன் தொலைத்தொடர்பு கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருக்கிறது என்று அரசு விளக்க வேண்டும்.காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.இதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை உடனே எதிர்த்து மத்திய அரசு வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.அதில், இது தொடர்பாக நீதிமன்றம் அதிகாரபூர்வ நோட்டீஸ்களை அனுப்பாமல் இருப்பதே நல்லது. அப்படி நோட்டீஸ் அனுப்பினால் அது இந்தியாவிற்கு எதிராக முடியும்.

காஷ்மீர் விவகாரத்தில் அந்த நோட்டீசை மற்ற நாடுகள் எடுத்துக்காட்டாக பயன்படுத்தும்.பிற நாடுகளுக்கு இது சாதகமாக மாறும். இது மிக மிக முக்கியமான விஷயம். அதேபோல் மிகவும் கவனமாக இதை கையாள வேண்டும். இங்கே பேசுவதை ஐநாவில் எழுப்ப வாய்ப்புள்ளது. அதனால் இதில் நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. நாங்கள் அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், நாங்கள் உத்தரவை பிறப்பித்துவிட்டோம் என்று கூறினார். அதன்பின் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...