Friday, April 19, 2024

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு !

Share post:

Date:

- Advertisement -

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், போலீசார் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரையும் பிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மண்டல ஐஜி வரதராஜு தலைமையில் டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் முன்னிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவர்களை பிடித்த திருவாரூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் பாரத நேரு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியம், இளங்கோ தலைமை காவலர்கள் காமராஜ், ரவி, முதல் நிலை காவலர் சுந்தரம் காவலர் ரகுவரன் அடங்கிய காவலர் குழுவினருக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றுகளை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...