மதுக்கூர் நகர மஜக சார்பில் சிவக்கொல்லை, முக்கூட்டுச்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மது எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதுவின் தீமைகள் குறித்து விளக்கி பேசினர்.
தொடர்ந்து நகர வீதிகளில் மஜகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரை செய்தனர்.
மஜக நகர செயலர் ரிபாயுதீன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலர் பேராவூரணி அப்துல் சலாம் உறுதி ஏற்பு முழக்கமிட்டார்.
இதில், திராவிட விடுதலை கழக மாவட்ட செயலர் பாரி, தமுமுக மாவட்ட பொருளாளர் ஜபருல்லாஹ், CPM பொறுப்பாளர் வேலாயுதம், மஜக நகர நிர்வாகிகள் அக்பர் அலி, சாகுல் ஹமீது, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பரப்புரை செய்தனர்.