Tuesday, December 2, 2025

அதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், எம் எஸ் எம் நகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளையும், பல வகையான நோய்களை உண்டாக்கும் குப்பை கூலங்களும் குவிந்து கானப்படுகின்றன.

மழைக்காலங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கின்றன. இப்பகுதியில்சரியான முறையில் குப்பைகளை அகற்றாமலும், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததாலும் வீடுகளின் உள்ளேயும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி அதில் நோய்களை பரப்பும் டெங்கு, வைரஸ் கொசுக்கள் வளரவும் ஏதுவாக காணப்படுகிறது.

இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அதிகம் அதிகமாக வைரஸ் ஜுரம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரியாமல் இருப்பதனால் வேலை நிமித்தமாக பொது மக்கள் வீதியில் இறங்கி நடப்பற்கே அஞ்சி வீடுகளின் உள்ளேயே முடங்கி விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கவனிப்பாரற்று புறக்கனிக்கப்பட்டு கிடக்கும் ஆதம் நகரை மிதக்கும் எம் எஸ் எம் நகரை மீட்டு தர யாரேனும் முன் வருவார்களா?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img