Tuesday, December 2, 2025

அதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் கட்டுக்கடங்காத வகையில் நாய்கள் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவரை கடித்து குதரியது.

இதனை அடுத்து விழிப்படைந்த ஜமாத்தார்கள் அரசியல் கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு மனு அளித்தனர் அந்த மனு மீதான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,மேலத்தெரு ஜமாத்தார்கள்,கீழத்தெரு ஜமாத்தார்கள், கடற்கரை தெரு ஜமாத்தார்கள் என இன்று பேரூராட்சி அலுவலகம் சென்று செயல் அலுவலர் ரமேஷ் இடம் மனு அளித்தனர்.

அதில் அதிரை நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து வெளியேற்றுமாறு குறிப்பிட்டு உள்ளது.

முன்னதாக திமுக நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்தியன் ரெட்கிராஸ் சார்பாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஒரே கோரிக்கையை முன்வைத்து தனித்தனியே மூன்ரு மனுக்கள் அளித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img