அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மையவாடிக்கு அருகே தூரவாரப்படாமல் இருக்கும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அந்த வாய்க்காலை முழுமையாக தூர்வாரும் பணி நடைபெற்றது.
வாய்க்காலில் இருந்த புதர்கள் என அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு முழுமையாக தூர்வார்ப்பட்டது. அதுமட்டுமின்றி கடற்கரைத்தெருவில் ஆங்காங்கே அடைத்திருந்த சாக்கடைகளையும் பேரூராட்சி சார்பில் ஊழியர்கள் சரிசெய்தனர்.
கோரிக்கையை ஏற்று உடனே நிறைவேற்றி தந்த அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷுக்கும், சுகாதார ஆய்வாளர் அன்பரசனுக்கும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.