Friday, March 29, 2024

சீக்கியர்களை வரவேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்….!

Share post:

Date:

- Advertisement -

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு கட்டப்பட்டுள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம்.

இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லும் வகையில் கர்தார்பூர் குருத்வாராவுக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம்,  நவம்பர் 12ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இதையொட்டி, ட்விட்டரில் இம்ரான் வெளியிட்ட பதிவில், குருநானக்கின் 550ஆவது பிறந்ததின கொண்டாட்டத்துக்கு சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...