சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு கட்டப்பட்டுள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம்.
இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லும் வகையில் கர்தார்பூர் குருத்வாராவுக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், நவம்பர் 12ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இதையொட்டி, ட்விட்டரில் இம்ரான் வெளியிட்ட பதிவில், குருநானக்கின் 550ஆவது பிறந்ததின கொண்டாட்டத்துக்கு சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.