இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி மோசமான சரிவை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும். தற்போது 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.
கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் 4.3% ஆக ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் 8 மூல நிறுவனங்களின் உற்பத்தியும் 5.8% ஆக குறைந்துள்ளது.
பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையே கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் முன்வைத்துள்ளனர்.