Thursday, March 28, 2024

நாகையில் கொட்டும் மழை… களத்தில் இறங்கிய தமீம் அன்சாரி எம்எல்ஏ !

Share post:

Date:

- Advertisement -

நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி.

நாகை மற்றும் நாகூர் பகுதிகளுக்கு இன்று சென்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை ஆய்வு செய்ததோடு தேங்கி நின்ற மழைநீரை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக இடை விடாது அடைமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்கும் பணி சாரல் மழைக்கும் மத்தியில் மேற்கொள்ளப்படுகிறது.

துப்புரவு உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து பேசிய நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி, அவர்களை பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தார். அப்போது தங்களுக்கு மழை கோட் கொடுத்தால் உதவியாக இருக்கும் என அந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இன்னும் 10 நாட்களுக்குள் தனது கட்சி நிதியில் இருந்து துப்புரவு ஊழியர்களுக்கு மழை கோட் வழங்கப்படும் என உடனடியாக உறுதியளித்தார். இதைக்கேட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...