Friday, April 19, 2024

மதுக்கூரில் நடைபெற்ற CAA-NRC-NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு – அரசியல் தலைவர்கள் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நேற்று 17/01/2020 வெள்ளிக்கிழமை மாலை NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் மதுக்கூர் தர்ஹா திடலில் துவங்கிய இம்மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, SDPI மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் பழனி ஃபாரூக், தமிழ் விடுதலைப்புலி கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இம்மாநாட்டில் பெண்கள், இளைஞர்கள் என சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மாநாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...