திராவிட பரம்பரையில் வந்ததாக பீலா விட்டு திரிந்த நடிகர் அவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்னே பீஜேபி யை கடுமையாக தாக்கினார் .தமிழகத்தில் காலை கையை ஊன்ன முடியாது என்றார் நாம் அதற்குள் போக வேண்டாம்.நியாயமாக போராடும் நம்மைப்பார்த்து கேலி கிண்டல் செய்யும் திரு .ராதாரவி அவர்களே பணம் பதவிக்காக என்ன வேணும்னாலும் பேசக் கூடாது .வரலாற்றைப் பேசக் கற்றுக்கொள்ளுங்க .நீங்க எங்களை இழித்தும் பழித்தும் பேசாவிட்டால் அங்கே உங்களுக்கு வேலை இருக்காதென்று எங்களுக்கு தெரியும்.அதற்காக என்ன வேணும்னாலும் பேசலாம் என்று பேசினால் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காரன் கூட ரசிக்க மாட்டான் என்பதே உண்மை.நீங்க நாளுக்கு நாள் நிறம் மாறும் தவளைபோல மாறக்கூடியவர் .தவளைதான் தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள் அதற்காகத்தான் அதனை உதாரணமாக கூறினேன்.நீங்களே கோயிலை ஏன் டெல்லியிலே இடித்தீர்கள் என்று கேள்வி எழுப்புறீங்க .அங்கே நடந்தவற்றை நேரில் கண்டது போல பேசி வெறுப்பேற்ற தமிழகத்தில் முயல வேண்டாம் .இதை யாருமே நம்ப தயாரில்லை எங்களின் தியாகம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும்.விமர்சனம் வையுங்க வேணாம் என்று சொல்லல .உங்க வயிற்றுப் பிழைப்புக்காக அடுத்தவங்களை தயவு செய்து இழிவு படுத்தாதீங்கண்ணே…………உங்கள் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவே
அதிரையிலிருந்து அப்துல் ஜப்பார் துல்கர்ணை