Friday, April 19, 2024

அமித் ஷா பேரணியில் ‘கோலி மாரோ’ என வன்முறை கோஷம் எழுப்பியவர்களை தேடி தேடி கைது செய்யும் கொல்கத்தா போலீஸ் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கொல்கத்தா பேரணியில் பங்கேற்றவர்கள் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க என கோஷம் எழுப்பியிருந்தனர். தற்போது இந்த கோஷத்தை எழுப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது மேற்கு வங்க அரசு.

சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் கோலி மாரோ என கோஷம் எழுப்பினர். அதாவது துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.

பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே கோஷங்களை இப்போது எழுப்புவதில்லை. அதற்கு பதிலாக வன்முறையை தூண்டும் வகையில் கோலி மாரோ என்றுதான் முழக்கம் எழுப்புகின்றனர்.

டெல்லி சட்டசபை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இப்படி கோஷம் எழுப்பியதால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் கோலி மாரோ கோஷம் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி , கோலி மாரோ கோஷம் எழுப்பியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றார்.

மேலும் கோலி மாரோ கோஷம் எழுப்புவர்களை வீடியோ பதிவுகளில் பார்த்தால் போலீசாரிடம் தெரிவிக்கவும்; நீங்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் மமதா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கோலி மாரோ கோஷம் எழுப்பிய சிலர் கொல்கத்தாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதில் மேற்கு வங்க போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...