Friday, March 29, 2024

அதிரை திமுகவினர் மறைந்த பொதுச் செயலாளருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி !

Share post:

Date:

- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொது செயலாளராக இருந்தவர் க.அன்பழகன்.

இனமான பேராசிரியர் என திமுகவினரால் அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன், 43 ஆண்டு காலமாக திமுக பொது செயலாளராக இருந்தர். பல்வேறு தொகுதிகளில் இருந்து 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வாகியும், முன்னாள் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர்.

வயோதிகத்தால் உடல்நலக் குறைப்பாடு ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காலமானார். இதனை தொடர்ந்து, அதிராம்பட்டினம் திமுகவின் நகர செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் சென்னைக்கு விரைந்தனர்.

அங்கு மரணித்த அன்பழகனார் உடல் வைக்கப்பட்ட அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அதிரை திமுக செயலாளர் இராம. குணசேகரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய சிறுபான்மையினர் அணி செயலாளர் மரைக்கா.கே. இதிரீஸ் அகமது உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...