CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 22வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர். ஷாநவாஸ், SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.
மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.