திமுகவின் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளராக கோலோச்சிய பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7 அன்று இயற்கை எய்தினார்.இந்நிலையில் அந்த நாள் முதலே அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற மிகப்பெரிய கேள்வி கட்சிக்குள்ளும், வெளியேயும் எழத் தொடங்கி இருக்கிறது.
இந்தப்போட்டியில் திமுகவின் முன்னணி தலைவர்கள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இதில் பொருளாளர் துரைமுருகன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ரேசில் முதல் இடத்தில் இருக்கிறார்.அதேப்போல டிஆர் பாலு, எ.வ வேலு,ஆ. ராசா,திருச்சி சிவா போன்றவர்களின் பெயர்களையும் உடன்பிறப்புகள் ஒலிக்கின்றன.
அதே சமயத்தில் ராசாவின் பெயரை திராவிட இயக்கங்கள் மொழிகின்றன, ஆதி குடிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் திமுகவை எதிர்க்க கூடிய கட்சிகள் கூறி வருகின்றனர்.
அதேப்போல இப்போது பொருளாளர் பதவியும் காலியாகி இருக்கிறது, பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகனும், பொருளாளர் பதவியை டிஆர் பாலுவும் பொறுப்பை ஏற்க கூடும் என்றே நமக்கு தகவல்கள் வருகிறது.
எது எப்படியோ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எப்படி இருக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
~ அதிரை எக்ஸ்பிரஸ்