சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது இப்போது தமிழக முழுவதும் பரவி வருகிறது அதனால் மக்கள் அச்சத்தில் விழ்ந்து உள்ளனர்.
அதனை தடுக்க அதிராம்பட்டினம் இளைஞர்கள் மற்றும் பேரூராட்சி ஒன்றினைந்து கொரோனா பற்றிய சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நடைபெற்றது.
இதில் அதிராம்பட்டினம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வும் கை கழுவது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு டாக்டர் குமரராஜா அவர்கள் மக்களுக்கு கூறினார்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் ,துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பேராசிரியர் செய்யது அகமது கபீர் மற்றும் அதிரை அனைத்து சமூதாய இளைஞர்கள் கலந்துகொண்டனர்.