சீனாவில் பிறந்து உலகெங்கிலும் பரவி மக்களை பாடாய் படுத்தியெடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
இந்நூற்றாண்டில் இது மிகப்பெரும் வைரஸ் நோயாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வைரஸ் நோயினால் இந்தியாவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அதில், (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், மக்கள் யாரும் வீட்டை வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து நாடு முழுவதும் இந்த சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நோயாளிகள் உணவின்றி தவித்துள்ளதை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளது நோயாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.