Saturday, April 20, 2024

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் !

Share post:

Date:

- Advertisement -

பல்வேறு நாடுகளில் அதிராம்பட்டினம் மக்கள் சிலர் தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் அமெரிக்கா, ஜப்பான், துபை, கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா என்ற கடுமையான நோய் தொற்று பரவியதை அடுத்து அந்நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதில் ஊரடங்கும் ஒன்றாகும். இதனால் அங்கு பணிக்கு சென்றிருந்த அதிரையர்கள் பலர் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இவர்களை மோப்பம் பிடித்த இந்திய அரசு அவர்களை தனிமைபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் அதிரைக்கு வந்த சுகாதார அதிகாரிகள் அவர்களை இனம்கண்டு அறிவுரை கூறியுள்ளனர்.

அதாவது தாங்கள் வீட்டை விட்டு வெளியில் சகஜமாக நடமாட கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனை ஒருகாதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ஊரில் பலர் சகஜமாக உலா வருவதாக சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற நிலையே தான் மற்ற நாடுகளிலிருந்தும் வந்தவர்கள். அரசின் உத்தரவை ஏற்க மறுப்பதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

நமக்கு நோய்த்தொற்று இருக்கிறதோ இல்லையோ சுகாதார அதிகாரிகள் விதித்துள்ள அந்த கெடு முடியும் வரை நிபந்தனை வாழ்வு வாழ்வதே சிறந்ததாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...