அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் சார்பில் தக்வா பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அரசின் உத்தரவை முழுமையாக ஏற்று கொரோனாவை கட்டுபடுத்தும் நோக்கில் மறு அறிவிப்பு வரும் வரை அதிராம்பட்டினம் எல்லைக்குட்பட்ட அனைத்து ஜும்மா பள்ளிகலிலும் தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் ஒப்புதலோடு இவ்வறிவிப்பை ஜமாத்துல் உலமா சபையினர் மரைக்காயர் பள்ளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர்.
அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் நாளை(26/03/2020) முதல் தொழுகைக்கு பாங்கு மட்டுமே சொல்லப்படும். அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளவும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்படுகிறது.