கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
இதனால் சிறு வணிகம் முதல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் சிலர் சுயநலமாக கட்டிட பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிரை எக்ஸ்பிரஸ்க்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிரையில் சில இடங்களில் ரகசியமாக கட்டிடப்பணி நடைபெறுவது உறுதியானது.
சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு எவ்வளவுதான் சட்டமியற்றினாலும், எங்களின் பணி முடிந்தாக வேண்டும் என்ற சில சுயநல விரும்பிகளால் அதிரையில் பேராபத்து உருவாகும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி யாரேனும் கட்டிடப்பணிகளை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.