அதிராம்பட்டினம் மீன் மார்கெட்டில் மாவட்ட துணை ஆட்சியர் கிளாஸ்டன் புஸ்பராஜ் தலைமையில், வட்டாட்சியர் அருள் பிரகாசம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சமூக இடைவெளி இல்லாத மீன்கடை, அங்காடிகள், காய்கறிக்கடை ஆகியவைகளை கடுமையாக எச்சரித்த துணை ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் உடனடியாக அனுமதியற்ற கடைகளை மூட உத்தரவிட்டார்.
மேலும் நாளைமுதல் மார்கெட்டில் அனைத்து வழிகளும் அடைக்கப்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் நானே அடைத்து சீழ் வைத்து விடுவேன் என எச்சரித்தார்.
இதனை அடுத்து தக்வா மீன் மார்கெட் நிர்வாகம் அனைத்து வாயில்களை அடைத்து நாளை முதல் ஒரே வாயிலை பயன்படுத்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.