அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி இன்று காலை நிர்வாக கமிட்டி எடுத்த முடிவின் பிரகாரம், மறு அறிவிப்பு வரும் வரை மீன் மார்கெட்டை மூட மீன் வியாபாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு இறைச்சி, காய்கறி விற்பனைக்கு பொருந்தாது எனவும், சமூக இடைவெளியை காய்கறி, இறைச்சிகடைக்கு வருபவர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
தக்வா பள்ளி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அதிராம்பட்டினம் பொதுமக்கள் வரவேற்றனர்.