Home » மல்லிப்பட்டிணம் அருகே தீவிபத்து,அரசு அதிகாரிகள் நிதியுதவி…!

மல்லிப்பட்டிணம் அருகே தீவிபத்து,அரசு அதிகாரிகள் நிதியுதவி…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் வீடு எரிந்து முற்றிலும் சேதம் அரசு நிதியுதவி.

சின்னமனையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(36) இவர் கூலி வேலைகளை செய்து வருகிறார்,ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று(ஏப் 14) இரவு திடீரென நெருப்பு பற்றி வீடு முழுவதும் எரிந்து 25000 மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் சி.வீரமணி,கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து ஆகியோர் முதற்கட்ட அரசு நிவாரண நிதியாக 5000 ரூபாயும்,அரிசி,வேட்டி,சேலையும்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா 2000 ரூபாய் வழங்கினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter