கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தேவையான அதிரடி நடவடிக்கைகளை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் முயற்சியாக வீடுகள்தோறும் கிழமைகள் அடிப்படையில் வெளியில் செல்வதற்கான அடையாள அனுமதி அட்டைகளை தன்னார்வலர்களின் உதவியுடன் அதிகாரிகள் விநியோகம் செய்து வந்தனர்.
இந்நிலையில், அவ்வாறு அதிரை நியூ பளாட் பகுதியில் தன்னார்வலர்கள் அடையாள அனுமதி அட்டையை விநியோகித்தபோது அங்கு குடியிருக்கும் ஒருவர் தனக்கு 2 அட்டைகள் வேண்டும் என அடம்பிடித்ததோடு பதவி காலாவதியான தலைவரின் பெயரை சொல்லி அதிகார திமிரில் கட்டளையிடும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அந்த தன்னார்வலர்கள், அப்பகுதியைவிட்டு விலகி சென்றனர்.