Wednesday, April 24, 2024

அதிரையரின் பணிக்கு வேட்டுவைத்த வாட்ஸ்அப்!

Share post:

Date:

- Advertisement -

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிரையிலும் ஆயிரக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக ஏன் நாம் அதனை பயன்படுத்துகின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இதனால் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் தேவையின்றி சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், துபாயின் பிரபல நிறுவனத்தில் பணிப்புரியும் அதிரையர் ஒருவர், அலுவலக நேரத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் டிஸ்கஷனில் தன்னையும் மறந்து வாட்ஸ்அப் க்ரூப்களை பார்த்துக்கொண்டிருந்த அவரை கவனித்த டீம் லீடர், இதுகுறித்து தனது மேனேஜரிடம் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அதிரையருக்கு அந்த நிறுவனம் மெமோ கொடுத்துள்ளது. இதனால் அவரின் புரோமோசன் பாதிக்கப்படும் என வேதனையுடன் கூறிய உறவினர், தேவையற்ற வாட்ஸ்அப் க்ரூப்களில் இல்லாமல் இருப்பது நல்லது என தெரிவித்தார்.

இது ஒருபுறம் என்றால், நாம் அதிகளவிலான க்ரூப்பில் இருப்பதால் சில முக்கியமான தகவல்கள் பத்துடன் பதினொன்றாக நமது கண்ணில் படாமல் இருந்து விடுகிறது. இதனை தடுக்க தேவையற்ற க்ரூப்களில் இருந்து வெளியேறிவிடுவது நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட உதவுவதுடன் வாட்ஸ்அப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...