Home » அதிரை : கனரா வங்கி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்கல் !

அதிரை : கனரா வங்கி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்கல் !

0 comment

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இதில் தூய்மை பணியாளர்களின் பணி அளப்பரியது. இவர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு கால நீட்டிப்பால் பாதுகாப்பு உபகரணங்களின் தேவைகளை தனியார் தொண்டு அமைப்புகளும் நிவர்த்தி செய்து வருகிறது.

அதன்படி இன்று அதிராம்பட்டினம் கனரா வங்கியின் சார்பில் தூய்மை பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கையுறை மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

இதனை அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம், கனரா வங்கியின் கிளை மேலாளர் கலா நேரில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வங்கியின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter