Home » கூத்தாநல்லூரில் தமுமுக & மமக சார்பில் 20வது நாளாக உணவு வழங்கல் !

கூத்தாநல்லூரில் தமுமுக & மமக சார்பில் 20வது நாளாக உணவு வழங்கல் !

by
0 comment

கொரோனா வைரஸ் தொற்று தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிக்கும் மக்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பில் பல்வேறு கட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமுமுக மற்றும் மமக சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 20வது நாளாக 180 பேருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் கூத்தாநல்லூர் நகர செயலாளர் சாதிக்கான் (எ) ஜெகபர் சாதிக் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter