Saturday, April 20, 2024

ஏழைகளுக்கு இந்திய அரசு உதவவில்லை ~ நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி..

Share post:

Date:

- Advertisement -

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இன்னும் அதிகம் செய்லபட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாம் போதுமான அளவிற்குகூட இன்னும் எதையும் செய்யவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையை இந்திய அரசு அறிவித்தது.

ஏழைகளுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும் அவர்களின் உணவு பாதுகாப்புக்கும் இதில் பெரு்மபாலான தொகை ஒதுக்கப்பட்டது.

கோவிட் 19 நோய் பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் இந்தியா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும், அது முடிவில்லை என்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நோய் நம்மிடையே நீண்ட காலம் இருக்கும் என்று தெரிவித்த அபிஜித் பேனர்ஜி, தடுப்பூசி இப்போதைக்கு தயாராகும் நிலையில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்திய – அமெரிக்க பொருளாதார நிபுணரான அபிஜித் பேனர்ஜி, 2019ஆம் ஆண்டு தனது மனைவியும் சக ஆய்வாளருமான எஸ்தர் டஃபலோ உடன் நோபல் பரிசு பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...