Thursday, April 18, 2024

குறைகளையே குறையாக சொல்லி திரிவது தாஃவா அல்ல!!!

Share post:

Date:

- Advertisement -

வெள்ளை தாளில் கரும்புள்ளி தென்பட்டால் அதன் வெள்ளை பகுதியை பார்க்காது சிறிதாக இடம் பெற்றுள்ள கரும்புள்ளியை உற்று நோக்குவதும் அதை கடுமையாக விமர்சனம் செய்வது மட்டுமே தீயோர்களின் குணமாக உள்ளது

இது போல் தான் பிறர்களின் குறைகளை மட்டுமே  ஆய்வு செய்வது இன்று  பரவலாக காணப்படுகிறது

ஒருவரின் மீது பட்டுள்ள மலத்தை கேவளமாக விமர்சிக்கும் நாம் அந்த மலத்தை நாமும்  நம் உடலுக்கு உள்ளே சுமந்து கொண்டுள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்

தூய்மையை பற்றி அவர்களுக்கு போதனை செய்யாமல் அவர்கள் அசுத்தமானவர்கள் என்று அவர்களை இழிவு படுத்துவது தூய உள்ளம் கொண்டோரின் நடைமுறை ஆகாது

தனிப்பட்ட எந்த குறைகளை நாம் ஒருவரிடம் பார்த்தாலும் நம்மிடம் இருக்கும் குறைகள் அவர்களிடம் இல்லாது இருப்பதை நாம் அறவே  கண்டு கொள்வது இல்லை

குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் நேரடியாக எத்தி வைப்பதும் அதை கண்ணியமாக  முறையாக சுட்டிக் காட்டுவதும் தான் நம் கடமையே தவிர பிறர்களின் குறைகளையே குறை கூறி கொண்டு சுற்றுவதும் விமர்சிப்பதும்  தஃவா எனும் அழைப்பு பணி அல்ல

ஆனால் இன்றோ பிறர்களின் தனிப்பட்ட  குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதையே இஸ்லாமிய தஃவா என்று கருதும் மனப்போக்கு அநேகரிடம் காணப்படுகிறது

மார்க்கத்தோடு தொடர்பு வைத்துள்ள பலர்களும் இதில் தங்களை வீரியமாக  ஈடுபடுத்தி வருவதை பரவலாக காண முடிகின்றது

பிறர்களின் குறைகளை அவர்களின் கண்ணியம் கருதி மறைப்பது கூட முஸ்லிம்களின் சிறந்த பண்பு என்பதை மறந்து விட வேண்டாம்

இறந்து போன உடலை குளிப்பாட்டும் நபர்கள் அந்த உடலின் அந்தரங்கத்தில் ஏதாவது குறையை கண்டால் அதை கூட வெளியில் சொல்லாதீர்கள் என்று இறந்து போன ஒருவரின் மானத்தை காக்க சொல்லும்  மார்க்கம் இஸ்லாம்

ஆனால் இன்றோ உயிரோடு உள்ள முஸ்லிம்களின் அந்தரங்க குறைகளை கூறு போட்டு விற்பனை செய்யும் இழி குணம்  கொண்டவர்களாக பலர்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகிறார்கள்

குறைகளே இல்லாத மனிதனும் இல்லை நிறைகளே  நிறைந்த மனிதனும் இல்லை

அவ்வாறு ஒரு படைப்பு இருந்தால் கூட  அதை மனித இனத்தில் சேர்த்து பார்க்க முடியாது

காரணம் அனைத்து மனிதர்களும் சாத்தானிய தூண்டுதலுக்கு சருகி விழும் தவறான ஆசை  எனும் அணுக்களோடும் தான் இறைவனால்  படைக்கப்பட்டுள்ளனர்

பிறரது காதுகள் ஒருவனின் குறைகளை கேட்பதில் ரசனை செலுத்தும் வரை தான் குறைகளை  கூறுபவன் அதை அன்றாடம்  அதிகப்படுத்துவான்

குறைகளை கேட்பதற்கே பிறரது காதுகள் தயார் இல்லை என்று நம் நிலை மாறி  விட்டால் குறை கூறுவோரின் நாவுகள் ஊமையாகி விடும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللّٰهِؐ: يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ، ثُمَّ قَالَ لِي: يَابُنَيَّ وَذلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ

என்னருமை மகனே!

நீர் காலையும், மாலையும் (எல்லா நேரங்களிலும்) உன் மனதில் பிறரைப் பற்றி எந்தக் குறையும் இல்லாத நிலையில் இருக்க முடிந்தால் அவசியமாக அவ்வாறே இருந்து கொள்ளவும்

எனது மகனே!
இது எனது வழியைச் சேர்ந்தது
எவர் எனது வழியை உயிர்ப்பித்தாரோ அவர் என்னை நேசித்தார்
எவர் என்னை நேசித்தாரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார் என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்  திர்மிதி

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ

ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள் அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள் மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் ஹாகிம்

J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வேர்கிளம்பி குமரிமாவட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...