Friday, April 19, 2024

பாதிக்கப்பட்ட அனைவரும் குணம்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு !

Share post:

Date:

- Advertisement -

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்தனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தனர். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கடைசியாக புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்தது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். கடந்த 22ம் தேதி 65 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.

மீதமுள்ள 4 பேர் மட்டும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அதன்பின்னர் கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை ஈரோடு படைத்துள்ளது.

தற்போது வரை கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா இல்லாத மாவட்டத்தின் வரிசையில் ஈரோடும் இணைந்துள்ளது. விரைவில் பல மாவட்டங்கள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக இல்லை. குணம் அடைவோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...