Saturday, April 20, 2024

சாரயக்கடை சாத்தியம் எனில்,நோன்பு கஞ்சியும் சாத்தியமே !

Share post:

Date:

- Advertisement -

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பள்ளி கல்லூரிகள் முதல் வழிபாட்டு தளங்கள்,வணிக வளாகங்கள் சிறு வணிகம் என எல்லா வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளாகியது.

இதனால் பலரின் வாழ்வாதாரம் அதளபாதாளத்தில் சென்றுள்ளது.

இருப்பினும் கொரோனா எனும் கொள்ளை நோயை விரட்ட அனைவரும் அரசுக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பல மாநிலங்களில் அரசால் நடத்தப்படும் மதுபான கூடங்கள், படிப்படியாக துவக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியை தவிர்த்து ஏனைய இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்க அரசு ஆணையிட்டு உள்ளது.

சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் இதனை செவியேற்காத அரசோ குடிகாரர்களை உற்சாக படுத்த சாராய கடையை வரும் 7 ஆம் தேதியன்று திறக்க மும்முரம் காட்டி வருகிறது.

ரமலான் காலங்களில் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படும் கஞ்சியை அரசு சமூக இடைவெளியை காரணம் காட்டி தடை செய்தது இதனை ஜமாத்தார்களும் ஒருமனதாக ஏற்று கொண்டனர்.

தமிழக மாவட்டங்களில், தடை செய்யப்பட்ட பகுதியை விடுத்து மற்ற இடங்களில் சாராய கடைகளை திறக்க அரசு போர்கால அடிப்படையில் பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிய வருகிறது.

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்துள்ளது என ஏடுகளில் வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

இதன் அடிப்படையில் அரசு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜமாத்தார்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து நோன்பு கஞ்சி விநியோகம் செய்ய நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் கொடுக்க பள்ளிவாசலின் நிர்வாகிகள் ஒத்துழைப்பார்கள்.

எனவே தமிழக அரசு பள்ளிகளில் நோன்பாளிகளுக்கு கஞ்சி காய்ச்சி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

சாராயக்கடை சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியம் தானே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...