தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உத்தரவுகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
ஏசி பொருத்தப்பட்ட பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி நகைக் கடைகளை திறக்க கூடாது என்று சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் சென்ற பொழுது பட்டுக்கோட்டை மைனர் பில்டிங் எதிர்புறத்தில் உள்ள ஏசி பொருத்தப்பட்ட செல் மால் ஷாப்பிங் சென்டர் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்டு இயங்கி வந்ததையடுத்து சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் அருள்பிரகாசம் மற்றும் வருவாய்த்துறையினர் செல் மால் கடையை பூட்டி சீல் வைத்தனர்.