தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் காவாளிப் பட்டி ஊராட்சி செல்வநாதபுரம் கிராம மக்கள் மதுக்கடைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் அறிவித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றினர்.
தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்களை கட்டிக் கொண்டு ‘கண்ணால் பார்பதில்லை, காதால் கேட்பதில்லை. வாயால் பேசுவதில்லை என்கிற நூதன இருப்பு போராட்டத்தை நடத்தினர்.