தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பயனாளர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி.
கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைமை கழகம் தொலைபேசி எண் வெளியிட்டு அதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் திமுகவை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை
சேதுபவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,நாடியம் கவுன்சிலர் பாமா செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர்.