Home » எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!

எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!

by
0 comment

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த கடைசி நபரும் வீடு திரும்பியுள்ளார்.

ஊர் திரும்பிய அவருக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி, காவல்துறை மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் பேசியதாவது, அதிராம்பட்டினம் மக்கள் மனம் எல்லாம் வானத்தைவிட பெரியது. தன்னார்வளராக வாழ்வாதாரத்திற்கு உதவி செய்து வருகிறார்கள். இவர்களை போன்ற மக்களை இதுவரை நான் பார்த்ததில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவரை வரவேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். அதிரை மக்களின் ஒத்துழைப்பு எங்களை மேலும் மேலும் பணி செய்ய உத்வேகமளிக்கிறது என பாராட்டி பேசினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter